புதன், பிப்ரவரி 01, 2017

கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு

குடியரசு தின நாள் 26-01-2017 அன்று சென்னை எழும்பூரில் வண. போதிபாலா (பிக்கு) மற்றும் பேராசிரியர் முனைவர் க. ஜெயபால் அவர்கள் இணைந்து எழுதிய மனித மன வகைபாடுகள் (புக்கல பஞ்ஞதி அபிதம்மா பீடகத்தின் நான்காம் பிரிவு) நூல் வெளியிட்டு விழாவில் முதல் நூலை பெற்று சிற்றுரையாற்றினார் திரு ஒரிசா பாலு அவர்கள். அவரின் உரை

இமயம் முதல் குமரி வரை என்ற சொற்றோடர் எந்த மொழியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது தமிழ் மொழியில் தான். ஒரு அலுவலகம் என்று எடுத்துக்கொண்டாலும் அல்லது ஒரு அருங்காட்சியகம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி அங்கு ஒரு புத்தர் சிலையை காணலாம்.
பௌத்தத்தில்  தமக்கு ஆர்வம் ஏற்பட்ட காரணம்
01. தாய்லாந்தில் இருந்தபொழுது மணிமேகலை தெய்வத்தை தாய்லாந்து மக்கள் மணிமேகலை என்று வணங்குவது
02. தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், பர்மா, மலேசியா என எத்துணை நாடுகள் இருக்கின்றனவோ அத்துணை நாடுகளுக்கும் இந்த கடலோடிகளுக்கும், பௌத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.
(Zen Buddhisim) ஜென் பௌத்தம் என்பதனை சிலர் தென் பௌத்தம் என்றுரைக்கின்றனர்.  அவ்வாறு அழைப்பதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது. சீன மக்கள் இந்த தென் கிழக்கு ஆசிய பகுதிகளை இன்று கூட ஆசிய டெங்கா (Tenka) என்று அழைக்கின்றனர். ஆசியா டெங்கா என்றால் ஆசியா தென்கரை என்று பொருள். மலேசியாவிலும் டெங்கா என்ற சொல் தென்கரையை குறிக்கிறது.   டெங்கா  என்பது கடற்கரை சார்ந்த சொல். 

உலகம் முழுவதும் தமிழ் கடந்து இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் சமூகத்தை பார்த்து இருக்கிறேன். உலகிலே மிக பழமையான நாகரிகம் எது என்றால் அது தமிழ் நாகரிகம் மட்டுமே. அது உலக நாடுகள் அனைத்துணையுடன் தொடர்புடையது. கடலை முதன்மை வேலையாக கொண்டு தமிழ் நாகரிகம் எல்லா திசைகளிலும் பரவியிருக்கிறது. தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்கள் உலகம் முழுவதும் உள்ளது.  

மணிமேகலை வான் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. விமானம் இல்லாமல் எப்படி சென்று இருக்க முடியும். மணிமேகலை கடல் வழிதான் சென்றிருக்கவேண்டும்.   கணகம் என்பதின் பொருள் எளிதில் கடக்க முடியாத பாதை. இன்றும் மீனவர்கள் பயன்படுத்தும் சொல் ( தனுஷ்கோடி, மலத்திவு என பல மீனவர்கள்). கடலில் காற்று மற்றும் சுழல் அதிகமாக இருக்கும் பாதைக்கு  கணக பாதை என்று பொருள்.

ஜாவா, ஜப்பான், பர்மா, சீனா, கொரியா போன்ற நாடுகளுடன் தொடர்புடைய பௌத்தம் என்பது அதன் அடிப்படை வேர் தமிழ் பௌத்தம். கடலுக்கு சென்று திரும்பி வந்த சமூகம் என்றல் அது தமிழ் சமூகம் தான். திரைமீலன் என்பது எங்கும் கிடையாது. திரைமீளன் என்றால் கடலுக்கு சென்று திரும்பி தான் இருந்த இடத்திற்கு திரும்புபவன். இந்த திரைமீளன் தான் திரமிளா  என்றும் திரவிடா என்றும் மருவியது .

சமஸ்கிருத எழுச்சி காலம் என்பது கனிஷ்கார் காலம் முதல் குப்தர் காலம் வரைதான். இதற்கு முன் எல்லோருக்கும் தெரிந்த மொழியாக இந்தியாவில் தமிழ் மொழி இருந்தது. உதாரணம் சிந்து சமவெளியில் 600 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இருக்கின்றன, தாம் மட்டும் 44,6௦௦ தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் கண்டறிந்ததாகவும் அதில் சுமார் 12,000 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இந்தியாவில் இருக்கிறது  என்றும் உரைத்தார்.                
   
பண்டித அயோத்திதாசரை இன்று பலர் அறிந்து இருக்கின்றனர் (முக அடையாளம்) ஆனால் அவரின் சிந்தனைகளை படித்து அறிந்துணர்ந்தவர்கள் அரிதாக இருக்கின்றனர். பண்டிதரின் சிந்தனைகள் மூன்று தொகுதிகள் வந்துள்ளது. தமிழகத்தில் லோட்டஸ் சுத்தாவை பற்றி அறிந்தவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.  கற்று உணருங்கள்.

மேலும் விரிவாக இது தொடர்பாக படிக்க