திங்கள், ஜூன் 06, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XV கச்சபேஸ்வரர் கோயில்

கச்சபேஸ்வரர்  கோயில் 

அமைவிடம்
ஊர்                            : பெரிய காஞ்சிவரம், நெல்லுகாரத்தெரு,  ராஜவீதி
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
காஞ்சிவரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர்  கோயில். மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இக்கோவிலில் உள்ளது. கச்சபேஸ்வரர்  கோயிலில் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் புடைப்பு சிற்பங்கள் & பௌத்த அடையாள சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள்.
01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடம் 
02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்
01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடத்தில் உள்ள புத்தர் சிலைகள்
சிலையமைப்பு  
இரு புத்தர் சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. அரை அடி உயரம் கொண்டது.   




02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்களில் உள்ள புத்தர் மற்றும் போதி சாத்துவார்களின் புடைப்பு சிற்பங்கள். 
இரு வரிசைகளை (Rows) கொண்ட ஐந்து தூண்கள் என மொத்தம் பத்து தூண்கள் இங்குள்ளது. முதல் வரிசை தூண்களில் 11 சிற்பங்களும் இரண்டாம் வரிசை தூண்களில் 4 சிற்பங்களும் உள்ளது. இந்த தூண்களில் மூன்று பக்கங்களில் சிற்பங்களும், பிற அடையாளங்களும் காணப்படுகின்றது. நான்காவது பக்கம் பொதிகைகளை கொண்டுள்ளது. இச்சிற்பங்கள் அனைத்தும் ஒரு அடி உயரம் கொண்டவை.

முதல் வரிசை தூணில் பதினோரு பௌத்த சிற்பங்கள் உள்ளது  
  • முதல் தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள்
  • மூன்றாவது தூணில் பௌத்த இரண்டு சிற்பங்கள்
  • நான்காவது தூணில் ஒரு பௌத்த சிற்பம்
இரண்டாம் வரிசை தூண்கள் நான்கு பௌத்த சிற்பங்கள் உள்ளது
  • முதல் தூணில் ஒரு பௌத்த சிற்பம்
  • இரண்டாம் தூணில் ஒரு பௌத்த சிற்பம்
  • மூன்றாவது தூணில் இரண்டு சிற்பங்கள்
முதல் தூண் (8): தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள் மற்றும் ஒரு தாமரை மலர் அமைந்துள்ளது. தூணின் முன்புறமுள்ள சிற்பங்கள் மூன்று. இச்சிற்பங்கள் அனைத்தும் சிந்தனை கையில் அமைந்துள்ளது தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது.

தூணின் பின்புறமுள்ள சிற்பங்கள் இரண்டு. தூணின் மேல்புறம் உள்ள சிற்பம் வழங்கும் கையுடன், தூணின் கீழ் பகுதியில் உள்ள சிற்பம் சிந்தனை கையுடன் அமைந்துள்ளது. இவ்விருசிற்பங்களும் தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது. இந்த இரு சிற்பங்களுக்குமிடையே தாமரை மலர் பொதியப்பட்டுள்ளது.

இடதுபுறமுள்ள சிற்பங்கள் மூன்று. தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ள இரண்டு சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. தோரணமின்றி தூணின் மையத்தில் அமைந்திருக்கும் சிற்பம் வழங்கும் கையில் அமைந்துள்ளது.  சிற்பங்களை பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும் 

மூன்றாவது தூண் (2) இரண்டு சிற்பங்கள் தூணின் மேற்பகுதியில் காணப்படுகிறது. துணின் முன்புறம் ஒரு சிற்பமும் பின்புறம் ஒரு  சிற்பமும் உள்ளது.
நான்காவது தூண் (1) இடது புறம் மேற்பகுதியில் ஒரு சிற்பம் காணப்படுகிறது.

இரண்டாம் வரிசை தூண்கள் (4):
முதல் மற்றும் இரண்டாவது தூணின் வலது புறம் கீழ்பகுதியில் உள்ள சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது.


மூன்றாவது தூண் (2) : தூணின் பின்புறம் மேற்பகுதியில் தியான முத்திரையுடன் ஒரு சிற்பமும் மையப்பகுதியில் நிலத்தை தொடும் முத்திரையுடன் ஒரு சிற்பமும் அமர்ந்துள்ளது. இவ்விரு சிற்பங்களும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது.சிற்பங்களை பார்க்க

கச்சீஸ்வரர் கோயில் பூர்வ புத்தர் கோயில்.  
காஞ்சிபுர கச்சீஸ்வரர் கோயில் பூர்வத்தில் புத்தர் கோயில் என்பதற்கு அறிஞர்கள்  அளிக்கும் ஆதாரங்கள்/ விளக்கங்கள் .

01) ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி: 
01. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.
02. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.
03. இக்கோயில் அருகில் உள்ள ஏரிக்கு 'புத்தேரி' என்றும் தெருவிற்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன. புத்தேரித் தெரு என்னும் பெயர் 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. இத்தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.
02 ) வரலாற்று  ஆராய்சியாளர் Dr.மா . இராசாமாணிக்கனார் 
01. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது.
02. இன்றுள்ள "புத்தேரி"த் தெரு என்பது புத்தர் சேரி என்று இருத்தல் வேண்டும். புத்தேரி தெரு என்றே சோழர் கல்வெட்டுகளில் பயின்று வருதல் இதன் பழமையைக் காட்டுகிறது (பல்லவர் வரலாறு - பக்  327 )
03) தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் 
01) இக்கோவிலில் வழிபட்டோர் தாராதேவியை வழிபட்ட பௌத்த மதத்துறவியாவர். ஐஞ்சந்திலும்  வழிபட்ட தாராதேவி  கோவில் துர்க்கை கோவிலாக மாறிய போது அத்துர்க்கா தேவியும் ஐஞ்சந்தி துர்க்கா பட்டாராகி என அழைக்கப்பட்டாள்.
02) துர்க்கா பட்டாராகி என்னும் இத்தேவி  தாரா தேவியாகவும், இத்தேவி உள்ள கச்சிஸ்வரர் என்னும் சிவபெருமாளின் பெயர் பௌத்த சமயக் காஸ்யப்பர் ஆகவும் இருத்தல் வேண்டும். இப்போதுள்ள கச்சிஸ்வரர் கோவில் மாற்றப்பட்ட பௌத்த கோவிலாக உருவத்தில் இல்லாவிட்டாலும் கூட பௌத்தத்தின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது (பக் 64)
04) பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் : .
இக்கோவிலின் பின் பாதாதிட்டை (மேடு) சிதைந்துள்ளது, இக்கோவில் ஆதியில் புத்தர் கோவிலே. (போதி மாதவர் பக்கம் 163)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக