வியாழன், நவம்பர் 05, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்

கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்
அமைவிடம்
இடம்                          :பிள்ளையார் பாளையம்
ஊர்                             : காஞ்சீவரம்
வட்டம்                     : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள்  
புத்தர் சிலைகள்                   : 02 
மணிமேகலை சிலை         : 01
தார தேவி சிலை                 : 01
பழமையான போதி மரம்  : 02

இன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு "புத்தர் கோவில் தெரு" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர்.  பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.

இதே கருத்தை  மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று. 


சிலையமைப்பு
கை                                      : நிலத்தை தொடும் கை
கால்                                    : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                        : தீப்பிழம்பாக
தலைமுடி                         : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்         : மூன்று
ஒளிவட்டம்                      : தோல்கள்  வரை அமைந்துள்ள தோரணம்
சீவர ஆடை                      : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                               போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  :  3 அடி உயரம்
நூற்றாண்டு                     : கி.பி 7ஆம் நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம். 


கை                                     : சிந்தனை கை
கால்                                   : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                       : தீப்பிழம்பாக
தலைமுடி                       : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்      : மூன்று
ஒளிவட்டம்                    : தோல்கள் வரை அரை  வட்ட வடிவமாகவும்,                                                                      தோல்களிலிருந்து இருபுறமும் தூண்களை                                                                          கொண்டுள்ளது தோரணம்
சீவர ஆடை                     : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                              போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  : 2’ 6” உயரம்
நூற்றாண்டு                    : கி.பி 7ஆம்  நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம். 


மணிமேகலை சிலை: 
மார்பு வரை உள்ள ஒரு அடி உயர சிலை, கழுத்தணி (Neckless) மற்றும் Chain னுடன் காணப்படுகிறது. காதுகள் நீண்டு இருக்கிறது. முக்கின் நுனி சிறிது சிதைந்து உள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக