வியாழன், ஜூலை 08, 2010

அறிவர் அண்ணல் அம்பேத்கர்

எவ்வளவு அறிவு சிந்தனையும், கல்வி அறிவும் கொண்டு சமுக புரட்சி செய்து இருந்தாலும், புராணத்திற்கும், முடநம்பிக்கைக்கும் முக்கியத்துவம் அளிபவர்கள் சமுக புரட்சிக்கு, அறிவுசிந்தனைக்கு மதிப்பு அளிப்பது இல்லை.


அறிவாளிகள், நற்குணம் உடைவர்கள் என எந்த ஒரு சாதியையும், மதத்தினரையும், மொழி பேசுபவர்களையும், நாட்டவர்களையும் சொல்ல முடியாது


அறிவர் அண்ணல் அம்பேத்கர்ரை குறை சொல்பவர்கள்,அவறுடன் ஒப்பிட்டு சமுக புரட்சி செய்தவர்கள் யார் யார்? எவ்வாறு என்று சொல்லுங்கள்.

மெத்த படித்த பலர் இருந்தாலும், அரசியல் சட்டம் எழுத முடியவில்லை. இந்து சட்டம் ஒன்றை எழுத, மெத்த படித்த பலர் இருந்தாலும் அதை ஆங்கிலேயன் எழுதி விட்டு சென்றான்.

பெண் கல்வி, சொத்து உரிமை, மறுமணம், கோவில் செல்ல அனுமதி போன்ற பல சமுக உயர்வுக்கு (சமத்துவம்) இவற்றுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்களை (புத்தர், மகாத்மா ஜோதிப புலே, அண்ணல் அம்பேத்கர், மற்றும் பலர்) சாதி மதம் மொழி என பிரித்து பார்த்து, பிறப்பின் அடிபடையில் மரியாதை அளிக்காமல், செயல் அடிபடையில் மரியாதை அளியுங்கள்.

எந்த சாமியாராவது பெண் கல்வி, சொத்து உரிமை, மறுமணம் பற்றி சீரிய சிந்தனை போதித்தனறா.

கல்வி கடவுள் என சொல்லப்படும் சரஸ்வதி கூட
-கல்வி (அறிவு) முக்கியத்தை பற்றி ஏதும் வாய் திருந்தது இல்லை
-பெண் கல்வி பற்றி நீனைததும் இல்லை
-கல்வி கடவுள் என சொல்லபடாத கடவுள், புனிதம் என சொல்லப்படும் "பகவத் கீதை" அளிக்கும் போது, ஏன் இந்த கல்வி கடவுள் என சொல்லப்படும் சரஸ்வதியால் கொடுக்கமுடிவல்லை?

இக்கல்வி கடவுள் சரஸ்வதியால் எப்படி பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். இதை போன்று செல்வக்கடவுள் என சொல்லப்படும் இலட்சுமியால் எப்படி பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

அறிவர் அண்ணல் அம்பேத்கர்ரை குறை சொல்பவர்கள், அவரால் அனுபவிப்பதை பெற மறுபிர்களா. உங்கள் பெண் குழந்தைகளுக்கு கல்வி, சொத்து உரிமை, கோவில் செல்ல மறுபிர்களா?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக