திங்கள், ஜனவரி 24, 2011

பௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்



01 . ஓவ்வொரு பௌத்தரும் தமக்கு மிக அருகாமையில் உள்ள பௌத்த கற்றூண் சிற்பங்கள், குகைகள் மற்றும் பண்டைய கால எஞ்சியுள்ள உயரிய தலங்களுக்கு 
ஓவ்வொரு முழுநிலவு  (Full Moon Day ) நாளில் சென்று
வணங்கவேண்டும்

02 . இந்தியாவில் கற்சிலைகள் மற்றும் சிற்பங்கள் வடிப்பதும்
குகைகள் உருவாக்குவதும் சாம்ராட் அசோகன் காலத்தில்தான்
தொடங்கி வைக்கப்பட்டது. அவருக்கு முன்பு இம்முயற்சிகள் 
இந்தியாவில் தோன்றவில்லை

03 .இந்தியாவில் ஏறத்தாழ 2000 குகைகளும், சீனாவில் 4000 குகைகளும் பாகிஸ்தானில் 2500 குகைகளும் உள்ளன.

04 . இந்தியாவில் உள்ள 2000 குகைகளில் சிதைக்கப்பட்ட சில
 பௌத்த இடங்கள்.
  • திருப்பதி வெங்கடாசலபதி
  • சிறிசைலம்
  • காஞ்சிபுரம்  -100 க்கும் மேற்பட்ட விகாரைகள்
  • மதுரை மீனாட்சியம்மன் கோவில் 
  • சபரிமலை ஐயப்பன்
  • பாந்தர்பூரின் விட்டாலா
  • கேதர்நாத்
  • பத்ரிநாத் 
  • அமர்நாத் 
  • விஷ்ணு தேவி 
  • பஸ்தாரின் தண்டிச்வரி 
  • கார்லாவின்  ஏக்வீரதேவி
  • வீராரின் ஜீவதானி
  • பூரி ஜெகநாதர்
  • நாக்பூர் அருகில் உள்ள இராம் தேக் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள்

05 .தற்போது 200 -300 பௌத்த தலங்கள் சிதைந்து அழியும் நிலையில் விடப்பட்டுள்ளன. 

06 . திரு அலெக்சாண்டர்   கன்னிங்காம் இந்திய முழுவதும் அகழ் ஆராய்சி செய்த போது கிடைத்த பொருள்கள் மற்றும் நினைவு சின்னங்கள் யாவும் பௌத்த நெறி சார்ந்தவையே எனக் கண்டார். இதனை  தனது படைப்பாக 23 தொகுதிகளாக 30 ஆண்டு அளவாக (1840 - 1870 ) எழுதினார்.

07 . தலை சிறந்த சீனப்பயணி யுவான் சுவாங் ஒவ்வொரு  சங்கம் விகாரைகள் அமைந்த பகுதிகளாக காண்டதாக எழுதியு உள்ளவைகள்
  • காஷ்மீர்
  • ராஜேஸ்தான்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகம்
  • கேரளா
  • தமிழ் நாடு
  • ஒரிசா
  • உத்திரப்பிரதேசம்
  • அரியானா
  • இமாச்சலப்பிரதேசம் 
  • மற்றும் எல்லா இடங்களிலும் (1000 - 4000 ) வரை பௌத்த பிக்குகள் இருந்ததார்கள்   

08 .பண்டைய இந்தியாவின் தலைசிறந்தப் பேரரசராக விளங்கிய அசோகர் அகில உலகெங்கும் 84000 கற்றூண் சிற்பங்கள், கட்டிஎழுப்பிய  குகைகள், கற்றூண்களில்  
பொறிக்கப்பட்ட எழுத்துகளை நாடியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1200 லிருந்து 1500 வரையிலான புனிதமாக்கப்பட்ட குகைகள் உள்ளன. இவற்றில் நமக்கு தெரிந்தவைகள் 10 முதல் 15 குகைகள் மட்டுமே. எப்படி சாவித்திரிபாய் பூலேயின்  புரட்சிகர பணியை எந்தவொரு நாளிலும் முக்கியப்படுத்தாது போல பௌத்தக் குகைகளில் உள்ள வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் எவரும் எங்கும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு  இந்தியாவின் பார்ப்பனியச் சாதியே முழுமுதற் காரணம். பார்பனர்கள் இந்த சிற்பங்களை உடைத்து, சிதைத்து, முகப்பொலிவை சீரழித்து உள்ளனர். இந்த     அழிவு வேலைகளை அவர்களோ அல்லது பிறர் உதவியுடனோ செய்தனர்.

09 .பீகாரின் புத்தகயாவுக்கு அருகாமையில் உள்ள ஒரு புத்தர் சிலை "டோலிய பாபா" என்றழைக்கப்படுகிறது. இதனை   கல்லேறிந்து வழிபட்டால் புண்ணியம் பெறலாம் எனப் பார்பனர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். மூடநம்பிக்கை  கொண்ட மக்களும் தமது பாலின வல்லுறவாக்கத்தில் ஈடுபடுவதைக்கூட கடவுளின் அன்பு செய்யும் செயலாகக் கருதி புத்தர் சிலையை கல்லெறிந்து   வழிபடுகின்றனர்.

10 . ஒரிசாவில் புத்தர் சிலையின்   மீது எண்ணெய் ஊற்றப்படுகின்றது.

11 . புத்தர் சிலைகள் கண்மூடித்தனமாக சேதப்படுத்தப்பட்டு அல்லது உருக்குலையச் செய்து பிராமணக் கடவுளர்களின் தெய்வச்சிலைகள் குகைகளில் நிறுவப்பட்டுள்ளன. பௌத்த சிற்பங்கள் மீது அடர்ந்த செந்தூர வண்ணக் கலவை (காவி நிறம்) பூசி மறைக்கப்பட்டுள்ளது.

12 . மும்பையில் உள்ள யோகேசுவரி குகைகளின் கிழக்குபகுதியின்  நிலையோ மிகமோசமாக இருக்கிறது. குகைகள் இருக்கும் இடத்திலேயே குடிசைகள் மற்றும் சேரிகள் உருவாகியிருக்கின்றன. கழிவு நீரையும், குப்பைகளையும் குகைக்குள் ஓடவிடுகின்றனர். 2007 இல்  மும்பை உயர்நீதி மன்றம் யோகேஸ்வரி குகையை சுற்றி 200 மீட்டர் அளவிலான குடியிருப்புகள்  அகற்றப்பட ஆணை பிறப்பித்தது. ஆனால் மும்பை நகராட்சியோ, குடிசைகள் அதே இடத்தில் தொடர்ந்து இருந்திட ஒழுங்கமைக்குமாறு மகாராஷ்டிரா அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. முறைதவறி 1995 ஆம் ஆண்டுக்கு முன் எழுப்பிய கட்டிடங்களை அகற்ற ஆவன செய்ய வேண்டும் என்று அரசு தீர்மானம் இருப்பினும் மண்டபெஷாவர் குகைகளில் ஒரு கிறிஸ்துவச் சிலுவை, அங்குள்ள புத்தர் சிலையை சிதைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  குகைக்கு மேலே ஒரு கிறிஸ்துவ ஆலையம் எழுப்பப்பட்டுள்ளது. குகைக்குள் உள்ள புத்தர் சிலையை அழித்து சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

13 பூனாவுக்கு அருகில் உள்ள ஜுன்னர் குகையில் உள்ள புத்தர் சிலையை சிதைத்தும் அதன் கலை அழகை   அழித்தும் பிள்ளையார் போன்று முகம் திருத்தியும், தெய்வ அம்மன்களாக செந்தூர (காவி) வண்ணமிட்டும் உள்ளனர். கார்லே மற்றும் பாஜே குகைகளுக்கு முன்புறம் பார்ப்பனர்களின் தெய்வமான ஏக்வீர தேவியை நிருவியுள்ளனர். இங்கு    விலங்குகளை பலியிட்டு  வழிபடுகின்றனர். இதுவும்   புத்தரின் கொல்லாமை கொள்கையை இழிவுபடுத்தவே  செய்கின்றனர்.

பௌத்தக் குகைகளின் சிதைவுக்கு பௌத்தர்களின் அலட்சியமே அல்லது 
பாராமுகமே முதன்மைக் காரணம் என்று உணர்கிறோம்.

பௌத்தர்களே, பௌத்தக் குகைகளை பயன்படுத்தாமல்
 பௌத்த நெறி அல்லாதோரை குறைசொல்வது 
முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடேயாகும். இந்த வாய்ப்புகளை
நன்கு பயன்படுத்தி அல்லது உருவாக்கிக் கொண்டு
பார்பனர்கள் தங்கள் கடவுளர்களைப்  பௌத்தக் குகைகளில்
நிறுவியுள்ளனர். எனவே சிக்கலின் முக்கிய உயிர்கூறினை
அடையாளம் கண்ட பௌதர்கள்  இனி பௌத்தத் தலங்களை
அடிக்கடி சென்று பயன்படுத்த முடிவேடுக்கவேண்டும்.  
இதற்க்காக  மாதத்தில் ஒரு நாளை அதாவது முழு நிலவு
(Full Moon Day ) நாளில் பௌததலங்களுக்கு சென்று
தியானிக்கவும் தங்கவும் வணக்கம் செலுத்தவும் வேண்டும்.

இதனை நடைமுறைபடுத்த பாரத் லேனி சன்வார்தன் சமிதி
(Bharat Leni Sanwardhan Samitee - BLISS )  என்ற பெயரில் அமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. Ref http://www.buddhistheritage.net/

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக