வியாழன், ஏப்ரல் 11, 2024

குடியரசு தினமே உண்மையான சுதந்திர தினம்


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர். இந்திய சுதந்திர தினத்திலிருந்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யமாட்டார்கள். ஆனால் அவர்களின் அரசியலமைப்பு தான் இந்தியாவை ஆளும். 1947லிருந்து 1950வரை ஆங்கிலேயர் அரசியலமைப்பு படி இந்தியா இயங்கியது. 1950லிருந்து இந்தியா இந்திய அரசியமைப்பு படி இந்தியர்கள் ஆட்சி செய்கின்றனர். குடியரசு தினமே உண்மையான சுதந்திர தினம். இந்தியாவிற்கு வருட பிறப்பு என்பது 26 ஜனவரி (குடியரசு தினம்).         

உதாரணமாக அண்டை நாடான சிறிலங்கா சுதந்திரம் அடைந்தது 1948ல் ஆனால் அவர்களின் அரசியமைப்பு 24 ஆண்டுகள் கடந்து 1972ல் நடைமுறை படுத்தப்பட்டது. சுதந்திரமடைந்து 24 ஆண்டுகள் ஆங்கிலேயர் அரசியலமைப்பு படி சிறிலங்கா இயங்கியது. 

தேசியக் கொடி

கொடி உருவான வரலாறு 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை, நியமிக்க விவாதித்தது.

23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம், மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது.  இந்திய தேசியக் கொடி, முதல் முதலாக சுதந்திர இந்தியாவில், 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் ஏற்றப்பட்டது. இந்தியா குடியரசு நாடான பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய கொடியின் வண்ணம் மூன்று (காவி, வெண்மை, பச்சை) என்று தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.  தேசிய கொடியின் நடுவில் இடம் பெற்றுள்ள நீல நிற அசோக சக்கரம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. தேசிய கொடியில் அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வேறுபாடுகள்.

  • 15 ஆகஸ்ட்  1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் சுதந்திரதினம்.
    • இந்திய அரசியலமைப்பு 26 ஜனவரி  1950 இல் நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கிறது குடியரசு தினம்.
  • பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நள்ளிரவில் விடுதலை பெற்றது. ஆனால் நம் நாடு பிரிட்டிஷ் அரசியலமைப்பைப் பின்பற்றி பிரிட்டிஷ் மன்னரை அதன் தலைவராக அங்கீகரித்தது.
    • இந்திய அரசியலமைப்பைப் பின்பற்றி இந்திய குடியரசு தலைவர் அதன்  தலைவராக அங்கீகரித்தது. இந்தியாவில் அனைவரும் சமம் (ஆண்/ பெண், சாதி, மதம், மொழி, கலாச்சாரம்) என்று சொல்லும் ஒன்று.
  • செங்கோட்டை, புது தில்லியில் இந்தியப் பிரதமரால் கொடி ஏற்றுதல். சுதந்திர தினத்தில் நடைபெறும். கம்பத்தின் அடிப்பகுதியில் கொடி கட்டப்பட்டு செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவார்.
    • ராஜ்பாத் , புது தில்லியில் இந்திய ஜனாதிபதியால் குடியரசு தினத்தன்று கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டு முடிச்சை இழுப்பதன் மூலம் ஜனாதிபதி கொடியை இறக்குகிறார்.
  • சுதந்திர தினத்தில் பெரிய தேசிய இராணுவ அணிவகுப்பு இல்லை.
    • குடியரசு தினத்தன்று இராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
  • சுதந்திர தினத்தில் பொதுவாக தேசிய விருதுகள் வழங்கப்படுவதில்லை.
    • ஆனால் குடியரசு தினத்தன்று  தேசிய விருதுகள் வழங்குதல் நடைபெறும்
இந்திய குடியரசுதினத்தில் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை ஏன்?
இந்திய குடியரசு தினத்தில் குடியரசு தின படைப்பை பற்றி பேசப்படுகிறது. ஆனால் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை. இப்படி பேசாமல் இருந்தால் உயிரில்லா உடம்பு போன்றது, அது இயக்கமற்றது. அரசியல் சாசனம் எழுதியது SC இனத்தை சேர்ந்தவர் எனவே பேசுவதில்லை. அரசியல் சாசனம் SC இன மக்களுக்கா எழுதப்பட்டது? - S.ஜெயராஜ் MA ML.

குடியரசு நாளுக்கும் காந்திக்கும் எந்த தொடர்புமில்லை
01) இரண்டு வாரமாக செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தமிழக தலைவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வாகனங்கள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டதை விவாதமாக நடத்தப்பட்டுள்ளது. குடியரசு நாள் தினத்திற்கும் நிராகரிக்கப்பட்ட தலைவருக்கும் எந்த தொடர்புமில்லை. 

02) 1967லிருந்து சமூக ஆட்சியை அமைத்தோம் என்னும் திராவிட ஆட்சி குடியரசு நாள் அன்று காந்தி படத்தை வைத்து கொடியேற்றியதும் உண்டு. 15/08/1947 சுதந்திரம் பெற்ற நாள். 5 மாதம் கழித்து 30/01/1948ல் காந்தியின் வாழ்வு முடிந்துவிட்டது. 26/01/1950 குடியரசு நாள். காந்தியின் இறப்புக்கு பின் குடியரசு நாள். காந்திக்கும், குடியரசு நாளுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் காந்தி படத்தை வைத்து இன்றும் கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடி வருகின்றனர். - (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் 

TT கிரிஷ்ணமாச்சாரி - இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்-  
அரசியலமைப்பு தினம் என்று சொன்னால் Dr அம்பேத்கரை தவிர வேறு யாரையும் சொல்லமுடியாது. அரசியல் நிர்ணய சபையில் 7 பேர் கொண்ட உறுப்பினர்களை கொண்டது. ஒரு உறுப்பினர் பதவி விலகினார் (Resigned). ஒரு உறுப்பினர் இயற்க்கை எய்தினார் (Death). ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றுவிட்டார் (America). இரு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவேயில்லை. ஒரு உறுப்பினர் உடல் நலம் குறைவு (Sick). இந்திய அரசியமைப்பு என்பது (One Man Job) ஒருவரால் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும். (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங்